நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| தலைமகள் தூதுவிடல் |
| 2815 | அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ? (1) | |
|
| |
|
|
| 2816 | என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய் என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே? முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே (2) | |
|
| |
|
|
| 2817 | விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள் மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு மதியிலேன் வல் வினையே மாளாதோ? என்று ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே (3) | |
|
| |
|
|
| 2818 | என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ? நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (4) | |
|
| |
|
|
| 2819 | நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால் மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே (5) | |
|
| |
|
|
| 2820 | அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன் அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே? (6) | |
|
| |
|
|
| 2821 | என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே? (7) | |
|
| |
|
|
| 2822 | நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே (8) | |
|
| |
|
|
| 2823 | நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ? ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே (9) | |
|
| |
|
|
| 2824 | உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க் கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும் அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே (10) | |
|
| |
|
|
| 2825 | அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின் வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே (11) | |
|
| |
|
|