| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| ஆராதிப்பார்க்கு மிக இனியன் | 
					
			
			
      | | 2848 | பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார்
 அறவனை ஆழிப்படை அந்தணனை
 மறவியை இன்றி மனத்து வைப்பாரே   (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2849 | வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத் துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்
 எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
 அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே   (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2850 | ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
 தூய அமுதைப் பருகிப் பருகி என்
 மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே     (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2851 | மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
 அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
 இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ?   (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2852 | விடுவேனோ என் விளக்கை என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
 தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
 விடவே செய்து விழிக்கும் பிரானையே?     (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2853 | பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
 மராமரம் எய்த மாயவன் என்னுள்
 இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?   (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2854 | யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
 ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
 வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?   (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2855 | என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
 பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை
 முன்னை அமரர் முழுமுதல் தானே       (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2856 | அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
 அமர அழும்பத் துழாவி என் ஆவி
 அமரத் தழுவிற்று இனி அகலும்மோ?     (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2857 | அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
 நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
 பகலும் இரவும் படிந்து குடைந்தே     (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2858 | குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
 மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து
 உடைந்து நோய்களை ஓடுவிக்குமே     (11)
 | 
 |  | 
		
			|  |  |  |