| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன் | 
					
			
			
      | | 2859 | ஓடும் புள் ஏறி சூடும் தண் துழாய்
 நீடு நின்றவை
 ஆடும் அம்மானே       (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2860 | அம்மானாய்ப் பின்னும் எம் மாண்பும் ஆனான்
 வெம் மா வாய் கீண்ட
 செம் மா கண்ணனே   (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2861 | கண் ஆவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
 தண் ஆர் வேங்கட
 விண்ணோர் வெற்பனே   (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2862 | வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே
 நிற்கும் அம்மான் சீர்
 கற்பன் வைகலே   (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2863 | வைகலும் வெண்ணெய் கைகலந்து உண்டான்
 பொய் கலவாது என்
 மெய் கலந்தானே       (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2864 | கலந்து என் ஆவி நலம் கொள் நாதன்
 புலன் கொள் மாணாய்
 நிலம் கொண்டானே     (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2865 | கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
 தண் தாமம் செய்து என்
 எண் தான் ஆனானே     (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2866 | ஆனான் ஆன் ஆயன் மீனோடு ஏனமும்
 தான் ஆனான் என்னில்
 தான் ஆய சங்கே     (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2867 | சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
 எங்கும் தானாய
 நங்கள் நாதனே     (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2868 | நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான்
 ஓதம் போல் கிளர்
 வேத நீரனே       (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2869 | நீர்புரை வண்ணன் சீர் சடகோபன்
 நேர்தல் ஆயிரத்து
 ஓர்தல் இவையே       (11)
 | 
 |  | 
		
			|  |  |  |