நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன் |
| 2859 | ஓடும் புள் ஏறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே (1) | |
|
| |
|
|
| 2860 | அம்மானாய்ப் பின்னும் எம் மாண்பும் ஆனான் வெம் மா வாய் கீண்ட செம் மா கண்ணனே (2) | |
|
| |
|
|
| 2861 | கண் ஆவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண் ஆர் வேங்கட விண்ணோர் வெற்பனே (3) | |
|
| |
|
|
| 2862 | வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே (4) | |
|
| |
|
|
| 2863 | வைகலும் வெண்ணெய் கைகலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே (5) | |
|
| |
|
|
| 2864 | கலந்து என் ஆவி நலம் கொள் நாதன் புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே (6) | |
|
| |
|
|
| 2865 | கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம் தண் தாமம் செய்து என் எண் தான் ஆனானே (7) | |
|
| |
|
|
| 2866 | ஆனான் ஆன் ஆயன் மீனோடு ஏனமும் தான் ஆனான் என்னில் தான் ஆய சங்கே (8) | |
|
| |
|
|
| 2867 | சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய நங்கள் நாதனே (9) | |
|
| |
|
|
| 2868 | நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரனே (10) | |
|
| |
|
|
| 2869 | நீர்புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே (11) | |
|
| |
|
|