| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம் | 
					
			
			
      | | 2881 | பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
 ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த அக்
 கரு மாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே   (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2882 | கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
 மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
 விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே?   (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2883 | எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை
 கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை
 எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே   (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2884 | நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம்? இனி என்ன குறைவினம்?
 மைந்தனை மலராள் மணவாளனைத்
 துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய்   (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2885 | கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
 உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
 கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே   (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2886 | நீயும் நானும் இந் நேர்நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
 தாயும் தந்தையும் ஆய் இவ் உலகினில்
 வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே     (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2887 | எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
 எந்தை எம் பெருமான் என்று வானவர்
 சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே     (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2888 | செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
 அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
 நல்கி என்னை விடான் நம்பி நம்பியே     (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2889 | நம்பியை தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
 உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
 எம் பிரானை என் சொல்லி மறப்பனோ?     (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2890 | மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன் மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணொடு
 மறப்பு அற என் உள்ளே மன்னினான் தன்னை
 மறப்பனோ இனி யான் என் மணியையே?     (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2891 | மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர் அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
 பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன்
 தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே     (11)
 | 
 |  | 
		
			|  |  |  |