நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
பிரிவாற்றாமைக்கு வருந்தல் |
2892 | வாயும் திரை உகளும் கானல் மட நாராய் ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் நோயும் பயலைமையும் மீது ஊர எம்மேபோல் நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே? (1) | |
|
|
|
|
2893 | கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால் ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான் தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே? (2) | |
|
|
|
|
2894 | காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல் நீ முற்றக் கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால் தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே (3) | |
|
|
|
|
2895 | கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய் அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ உடலம் நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே? (4) | |
|
|
|
|
2896 | ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற வாழிய வானமே நீயும் மதுசூதன் பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே? (5) | |
|
|
|
|
2897 | நைவாய எம்மேபோல் நாள் மதியே நீ இந் நாள் மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால் ஐ வாய் அரவு அணைமேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே? (6) | |
|
|
|
|
2898 | தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே (7) | |
|
|
|
|
2899 | இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய் மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே? (8) | |
|
|
|
|
2900 | நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய் செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம் பெருமான் அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே? (9) | |
|
|
|
|
2901 | வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய் மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே (10) | |
|
|
|
|
2902 | சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே (11) | |
|
|
|
|