நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல் |
2903 | திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய் எண்ணின் மீதியன் எம் பெருமான் மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே (1) | |
|
|
|
|
2904 | ஏ பாவம் பரமே ஏழ் உலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரிஏறு அன்றியே? (2) | |
|
|
|
|
2905 | ஏறனை பூவனை பூமகள் தன்னை வேறுஇன்றி விண் தொழத் தன்னுள் வைத்து மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மால் தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே? (3) | |
|
|
|
|
2906 | தேவும் எப் பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன் எம் பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே? (4) | |
|
|
|
|
2907 | தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே மிகும் தேவும் எப் பொருளும் படைக்கத் தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி மேல் அறிவார் எவரே? (5) | |
|
|
|
|
2908 | எவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வு இன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் எம் ஆழி அம் பள்ளியாரே (6) | |
|
|
|
|
2909 | பள்ளி ஆல் இலை ஏழ் உலகும் கொள்ளும் வள்ளல் வல் வயிற்றுப் பெருமான் உள் உள் ஆர் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக்கருத்தே? (7) | |
|
|
|
|
2910 | கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப் பிரான் அன்றி யாரே திருத்தித் திண் நிலை மூவுலகும் தம்முள் இருத்திக் காக்கும் இயல்வினரே? (8) | |
|
|
|
|
2911 | காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் தெய்வ உலகுகளே (9) | |
|
|
|
|
2912 | கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ என்று br> வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே (10) | |
|
|
|
|
2913 | ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக் கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல் வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன் ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே (11) | |
|
|
|
|