நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல் |
2925 | ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வாள் நுதலே (1) | |
|
|
|
|
2926 | வாள் நுதல் இம் மடவரல் உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே (2) | |
|
|
|
|
2927 | இரக்க மனத்தோடு எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீருக்கே? (3) | |
|
|
|
|
2928 | இலங்கை செற்றவனே என்னும் பின்னும் வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிகக் கலங்கிக் கைதொழும் நின்று இவளே (4) | |
|
|
|
|
2929 | இவள் இராப்பகல் வாய்வெரீ இத் தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு திவளும் தண் அம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே? (5) | |
|
|
|
|
2930 | தகவு உடையவனே என்னும் பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் எனது அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் உக உருகிநின்று உள் உளே (6) | |
|
|
|
|
2931 | உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என வள்ளலே கண்ணனே என்னும் பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என கள்வி தான் பட்ட வஞ்சனையே (7) | |
|
|
|
|
2932 | வஞ்சனே என்னும் கைதொழும் தன நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே (8) | |
|
|
|
|
2933 | பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் வட்ட வாய் நுதி நேமியீர் நுமது இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே? (9) | |
|
|
|
|
2934 | ஏழை பேதை இராப்பகல் தன கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே (10) | |
|
|
|
|
2935 | வாட்டம் இல் புகழ் வாமனனை இசை கூட்டி வண் சடகோபன் சொல் அமை பாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி சூட்டலாகும் அம் தாமமே (11) | |
|
|
|
|