| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக | 
					
			
			
      | | 2993 | கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
 வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
 தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2994 | சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
 மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப்
 பதியது ஏத்தி எழுவது பயனே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2995 | பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
 மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
 அயல்மலை அடைவது அது கருமமே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2996 | கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
 வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்
 திருமலை அதுவே அடைவது திறமே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2997 | திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
 மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலைப்
 புறமலை சாரப் போவது கிறியே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2998 | கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
 மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
 நெறி பட அதுவே நினைவது நலமே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2999 | நலம் என நினைமின் நரகு அழுந்தாதே நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
 மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை
 வலம் முறை எய்தி மருவுதல் வலமே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3000 | வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்
 வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
 வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3001 | வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில்
 மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை
 தொழக் கருதுவதே துணிவது சூதே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3002 | சூது என்று களவும் சூதும் செய்யாதே வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
 மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலைப்
 போது அவிழ் மலையே புகுவது பொருளே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3003 | பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல் மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
 தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
 அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |