நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக |
| 2993 | கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே (1) | |
|
| |
|
|
| 2994 | சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப் பதியது ஏத்தி எழுவது பயனே (2) | |
|
| |
|
|
| 2995 | பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில் மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை அயல்மலை அடைவது அது கருமமே (3) | |
|
| |
|
|
| 2996 | கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில் வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத் திருமலை அதுவே அடைவது திறமே (4) | |
|
| |
|
|
| 2997 | திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது அறம் முயல் ஆழிப் படையவன் கோயில் மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போவது கிறியே (5) | |
|
| |
|
|
| 2998 | கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில் மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை நெறி பட அதுவே நினைவது நலமே (6) | |
|
| |
|
|
| 2999 | நலம் என நினைமின் நரகு அழுந்தாதே நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை வலம் முறை எய்தி மருவுதல் வலமே (7) | |
|
| |
|
|
| 3000 | வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில் வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (8) | |
|
| |
|
|
| 3001 | வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில் மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே (9) | |
|
| |
|
|
| 3002 | சூது என்று களவும் சூதும் செய்யாதே வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலைப் போது அவிழ் மலையே புகுவது பொருளே (10) | |
|
| |
|
|
| 3003 | பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல் மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன் தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே (11) | |
|
| |
|
|