நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல் |
| 3004 | முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ? அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச் சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன் கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே (1) | |
|
| |
|
|
| 3005 | கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ (2) | |
|
| |
|
|
| 3006 | பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே (3) | |
|
| |
|
|
| 3007 | மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின் மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே? (4) | |
|
| |
|
|
| 3008 | வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் வருந்தாத ஞானம் ஆய் வரம்பு இன்றி முழுது இயன்றாய் வரும் காலம் நிகழ் காலம் கழி காலம் ஆய் உலகை ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே? (5) | |
|
| |
|
|
| 3009 | ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் உலகத்து எவ் எவையும் சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின்மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே? (6) | |
|
| |
|
|
| 3010 | வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய் கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே? (7) | |
|
| |
|
|
| 3011 | மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய் மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால் மாசூணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே? (8) | |
|
| |
|
|
| 3012 | மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே? (9) | |
|
| |
|
|
| 3013 | மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே முறையால் இவ் உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே? (10) | |
|
| |
|
|
| 3014 | வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனைச் சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர்ச் சடகோபன் துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும் உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே (11) | |
|
| |
|
|