நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும் |
| 3026 | ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்யவேண்டும் நாம் தெழி குரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே (1) | |
|
| |
|
|
| 3027 | எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும் சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே (2) | |
|
| |
|
|
| 3028 | அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம் தெள் நிறை சுனை நீர்த் திருவேங்கடத்து எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே (3) | |
|
| |
|
|
| 3029 | ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு? நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்கண் பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே (4) | |
|
| |
|
|
| 3030 | சோதி ஆகி எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ வேதியர் முழு வேதத்து அமுதத்தை தீது இல் சீர்த் திருவேங்கடத்தானையே? (5) | |
|
| |
|
|
| 3031 | வேம் கடங்கள் மெய்மேல் வினை முற்றவும் தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே (6) | |
|
| |
|
|
| 3032 | சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே (7) | |
|
| |
|
|
| 3033 | குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே (8) | |
|
| |
|
|
| 3034 | ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு:பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் நாள் மலர் ஆம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே (9) | |
|
| |
|
|
| 3035 | வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (10) | |
|
| |
|
|
| 3036 | தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் கேழ் இல் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே (11) | |
|
| |
|
|