| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும் | 
					
			
			
      | | 3026 | ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்யவேண்டும் நாம்
 தெழி குரல் அருவித் திருவேங்கடத்து
 எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3027 | எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும்
 சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
 அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3028 | அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
 தெள் நிறை சுனை நீர்த் திருவேங்கடத்து
 எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3029 | ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
 நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்கண்
 பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3030 | சோதி ஆகி எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ
 வேதியர் முழு வேதத்து அமுதத்தை
 தீது இல் சீர்த் திருவேங்கடத்தானையே?             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3031 | வேம் கடங்கள் மெய்மேல் வினை முற்றவும் தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
 வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
 ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3032 | சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
 நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
 சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3033 | குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
 சென்று சேர் திருவேங்கட மா மலை
 ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3034 | ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு:பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
 ஆயன் நாள் மலர் ஆம் அடித்தாமரை
 வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3035 | வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ
 பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம்
 மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3036 | தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
 கேழ் இல் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
 வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |