நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| ஆத்மாக்கள் அனைத்தும் அவனே |
| 3037 | புகழும் நல் ஒருவன் என்கோ? பொரு இல் சீர்ப் பூமி என்கோ? திகழும் தண் பரவை என்கோ? தீ என்கோ? வாயு என்கோ? நிகழும் ஆகாசம் என்கோ? நீள் சுடர் இரண்டும் என்கோ? இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ? கண்ணனைக் கூவும் ஆறே (1) | |
|
| |
|
|
| 3038 | கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ? மேவு சீர் மாரி என்கோ? விளங்கு தாரகைகள் என்கோ? நா இயல் கலைகள் என்கோ? ஞான நல் ஆவி என்கோ? பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே (2) | |
|
| |
|
|
| 3039 | பங்கயக் கண்ணன் என்கோ? பவளச் செவ்வாயன் என்கோ? அம் கதிர் அடியன் என்கோ? அஞ்சன வண்ணன் என்கோ? செங்கதிர் முடியன் என்கோ? திரு மறு மார்பன் என்கோ? சங்கு சக்கரத்தன் என்கோ? சாதி மாணிக்கத்தையே (3) | |
|
| |
|
|
| 3040 | சாதி மாணிக்கம் என்கோ? சவி கொள் பொன் முத்தம் என்கோ? சாதி நல் வயிரம் என்கோ? தவிவு இல் சீர் விளக்கம் என்கோ? ஆதி அம் சோதி என்கோ? ஆதி அம் புருடன் என்கோ? ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே (4) | |
|
| |
|
|
| 3041 | அச்சுதன் அமலன் என்கோ? அடியவர் வினை கெடுக்கும் நச்சும் மா மருந்தம் என்கோ? நலங் கடல் அமுதம் என்கோ? அச் சுவைக் கட்டி என்கோ? அறுசுவை அடிசில் என்கோ? நெய்ச் சுவைத் தேறல் என்கோ? கனி என்கோ? பால் என்கேனோ? (5) | |
|
| |
|
|
| 3042 | பால் என்கோ? நான்கு வேதப் பயன் என்கோ? சமய நீதி நூல் என்கோ? நுடங்கு கேள்வி இசை என்கோ? இவற்றுள் நல்ல மேல் என்கோ? வினையின் மிக்க பயன் என்கோ? கண்ணன் என்கோ? மால் என்கோ? மாயன் என்கோ? வானவர் ஆதியையே (6) | |
|
| |
|
|
| 3043 | வானவர் ஆதி என்கோ? வானவர் தெய்வம் என்கோ? வானவர் போகம் என்கோ? வானவர் முற்றும் என்கோ? ஊனம் இல் செல்வம் என்கோ? ஊனம் இல் சுவர்க்கம் என்கோ? ஊனம் இல் மோக்கம் என்கோ? ஒளி மணி வண்ணனையே (7) | |
|
| |
|
|
| 3044 | ஒளி மணி வண்ணன் என்கோ? ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர் மதிச் சடையன் என்கோ? நான்முகக் கடவுள் என்கோ? அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே (8) | |
|
| |
|
|
| 3045 | கண்ணனை மாயன் தன்னை கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன் தன்மேல் நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே (9) | |
|
| |
|
|
| 3046 | யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே (10) | |
|
| |
|
|
| 3047 | கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே (11) |
|
|
| |
|
|