நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல் |
3081 | முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே ஆழ் கடலைக் கடைந்தாய் புள் ஊர் கொடியானே கொண்டல் வண்ணா அண்டத்து உம்பரில் நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே (1) |
|
|
|
|
|
3082 | நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே (2) |
|
|
|
|
|
3083 | வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர் தாயவனே என்று தடவும் என் கைகளே (3) |
|
|
|
|
|
3084 | கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றி பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே (4) |
|
|
|
|
|
3085 | கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே (5) |
|
|
|
|
|
3086 | செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்று புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே (6) |
|
|
|
|
|
3087 | ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடைத் தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய் பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே (7) |
|
|
|
|
|
3088 | கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே சென்று செல்லாதன முன் நிலாம் காலமே உன்னை எந் நாள் கண்டுகொள்வனே? (8) |
|
|
|
|
|
3089 | கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? (9) |
|
|
|
|
|
3090 | பொருந்திய மா மருதின் இடை போய எம் பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான் வாசகமாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே? (10) |
|
|
|
|
|
3091 | புலம்பு சீர்ப் பூமி அளந்த பெருமானை நலம் கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன்சொல் வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே (11) |
|
|
|
|
|