| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல் | 
					
			
			
      | | 3125 | பாலன் ஆய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலை அன்னவசம் செய்யும் அண்ணலார்
 தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
 மாலுமால் வல்வினையேன் மட வல்லியே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3126 | வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
 நல் அடிமேல் அணி நாறு துழாய் என்றே
 சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3127 | பா இயல் வேத நல் மாலை பல கொண்டு தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
 சேவடிமேல் அணி செம் பொன் துழாய் என்றே
 கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3128 | கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன்
 பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
 ஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3129 | தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக் கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
 தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
 நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3130 | மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய் ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்
 பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
 ஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3131 | மடந்தையை வண் கமலத் திருமாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
 வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
 மடங்குமால் வாள் நுதலீர்! என் மடக்கொம்பே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3132 | கொம்பு போல் சீதைபொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணைமேல் அணி
 வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
 நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3133 | நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
 சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்
 இங்ஙனே சொல்லும் இராப் பகல் என்செய்கேன்?             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3134 | என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்
 மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
 பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3135 | மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல் மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
 ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
 மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |