நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல் |
| 3125 | பாலன் ஆய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே மாலுமால் வல்வினையேன் மட வல்லியே (1) | |
|
| |
|
|
| 3126 | வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர் நல் அடிமேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே (2) | |
|
| |
|
|
| 3127 | பா இயல் வேத நல் மாலை பல கொண்டு தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடிமேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே (3) | |
|
| |
|
|
| 3128 | கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே (4) | |
|
| |
|
|
| 3129 | தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக் கோளியார் கோவலனார் குடக் கூத்தனார் தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே (5) | |
|
| |
|
|
| 3130 | மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய் ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே (6) | |
|
| |
|
|
| 3131 | மடந்தையை வண் கமலத் திருமாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் வாள் நுதலீர்! என் மடக்கொம்பே (7) | |
|
| |
|
|
| 3132 | கொம்பு போல் சீதைபொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணைமேல் அணி வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்? (8) | |
|
| |
|
|
| 3133 | நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை? சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் இங்ஙனே சொல்லும் இராப் பகல் என்செய்கேன்? (9) | |
|
| |
|
|
| 3134 | என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே (10) | |
|
| |
|
|
| 3135 | மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல் மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே (11) | |
|
| |
|
|