நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல் |
| 3147 | மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும் கண்ணை உள்நீர் மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே என் பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே? (1) | |
|
| |
|
|
| 3148 | பெய்வளைக் கைகளைக் கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும் செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் தெய்வ உருவில் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே (2) | |
|
| |
|
|
| 3149 | அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும் வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற செறி வளை முன் கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? (3) | |
|
| |
|
|
| 3150 | ஒன்றிய திங்களைக் காட்டி ஒளி மணி வண்ணனே என்னும் நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா என்று கூவும் நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் என்று இன மையல்கள் செய்தான் என்னுடைக் கோமளத்தையே? (4) | |
|
| |
|
|
| 3151 | கோமள வான் கன்றைப் புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே (5) | |
|
| |
|
|
| 3152 | கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தன் ஆம் எனா ஓடும் வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்கொடி ஏறிய பித்தே (6) | |
|
| |
|
|
| 3153 | ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே (7) | |
|
| |
|
|
| 3154 | திரு உடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் உரு உடை வண்ணங்கள் காணில் உலகு அளந்தான் என்று துள்ளும் கரு உடைத் தேவு இல்கள் எல்லாம் கடல் வண்ணன் கோயிலே என்னும் வெருவிலும் வீழ்விலும் ஓவாள் கண்ணன் கழல்கள் விரும்புமே (8) | |
|
| |
|
|
| 3155 | விரும்பிப் பகவரைக் காணில் வியல் இடம் உண்டானே என்னும் கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் பெரும் புல ஆ நிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே (9) | |
|
| |
|
|
| 3156 | அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி அகலவே நீள் நோக்குக் கொள்ளும் வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும் பெயர்த்தும் கண்ணா என்று பேசும் பெருமானே வா என்று கூவும் மயல் பெருங் காதல் என் பேதைக்கு என்செய்கேன் வல்வினையேனே? (10) | |
|
| |
|
|
| 3157 | வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன் சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் நல் வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே (11) |
|
|
| |
|
|