| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல் | 
					
			
			
      | | 3257 | ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருள் ஆய் நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்
 பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வாரானால்
 ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே?             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3258 | ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி மா விகாரம் ஆய் ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்
 காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
 பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே.             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3259 | நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே நீள் இரவும் ஓயும் பொழுது இன்றி ஊழி ஆய் நீண்டதால்
 காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
 மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3260 | பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இம் மண் அளந்த
 கண் பெரிய செவ்வாய் எம் கார் ஏறு வாரானால்
 எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3261 | ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
 கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
 பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3262 | பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால் முன்நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
 மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
 இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் இடத்தே?             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3263 | காப்பார் ஆர் இவ் இடத்து? கங்கு இருளின் நுண் துளி ஆய் சேண் பாலது ஊழி ஆய் செல்கின்ற கங்குல்வாய்த்
 தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
 தீப் பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ?             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3264 | தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழி ஆய் மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்
 கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
 தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3265 | வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளி ஆய் அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
 செஞ் சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்
 நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3266 | நின்று உருகுகின்றேனே போல நெடு வானம் சென்று உருகி நுண் துளி ஆய் செல்கின்ற கங்குல்வாய்
 அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
 ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3267 | உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
 நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
 இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |