நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்) |
3400 | உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே (1) | |
|
|
|
|
3401 | ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே போரும் கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே? (2) | |
|
|
|
|
3402 | பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என் பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ? (3) | |
|
|
|
|
3403 | கொல்லை என்பர்கொலோ குணம் மிக்கனள் என்பர்கொலோ சில்லை வாய்ப் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும்? எல்லே செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே மேல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே (4) | |
|
|
|
|
3404 | மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத் தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில் பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே? (5) | |
|
|
|
|
3405 | இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய் தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே (6) | |
|
|
|
|
3406 | மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய் அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனிப் போய் செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே? (7) | |
|
|
|
|
3407 | ஒசிந்த நுண் இடைமேல் கையை வைத்து நொந்து நொந்து கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல் ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே? (8) | |
|
|
|
|
3408 | காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப் போய் சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே (9) | |
|
|
|
|
3409 | நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப் போய் அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனைத் தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே (10) | |
|
|
|
|
3410 | வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே (11) | |
|
|
|
|