நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல் |
| 3411 | பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ நல் நலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன் முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே. (1) | |
|
| |
|
|
| 3412 | மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே (2) | |
|
| |
|
|
| 3413 | ஓடிவந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்கு ஆய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீறு எழச் செற்ற பிரான் சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே (3) | |
|
| |
|
|
| 3414 | தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள்மேல் தும்பிகாள் பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்து அகன்ற மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே? (4) | |
|
| |
|
|
| 3415 | நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள் வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கண் கருமுகிலை செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு? என்மினே (5) | |
|
| |
|
|
| 3416 | என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி செல்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே (6) | |
|
| |
|
|
| 3417 | பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் யாவையும் யாவரும் ஆய் நின்ற மாயன் என் ஆழிப் பிரான் மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே? (7) | |
|
| |
|
|
| 3418 | பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே அருள்செய்து ஒருநாள் மாசு அறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே (8) | |
|
| |
|
|
| 3419 | பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் நீர்த் திரைமேல் உலவி இரை தேரும் புதா இனங்காள் கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே (9) | |
|
| |
|
|
| 3420 | வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம் அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள் என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே (10) | |
|
| |
|
|
| 3421 | மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல் நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார் ஊற்றின்கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே (11) | |
|
| |
|
|