| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல் | 
					
			
			
      | | 3477 | ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
 மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
 ஊழி எழ உலகம் கொண்டவாறே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3478 | ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
 மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
 சாறுபட அமுதம் கொண்ட நான்றே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3479 | நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
 நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
 ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3480 | நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ மலை
 தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
 ஊளி எழ உலகம் உண்ட ஊணே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3481 | ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர் ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
 ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
 காணுடைப் பாரதம் கை அறை போழ்தே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3482 | போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
 கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
 ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3483 | மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலைபோல் புரள கடல்
 ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
 நீறு பட இலங்கை செற்ற நேரே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3484 | நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும் நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
 நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
 நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3485 | அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
 அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
 அன்று முதல் உலகம் செய்ததுமே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3486 | மேய் நிரை கீழ் புக மா புரள சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
 ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
 தீ மழை காத்து குன்றம் எடுத்தானே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3487 | குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
 நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
 வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே            (11)
 | 
 |  | 
		
			|  |  |  |