நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல் |
3477 | ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே (1) | |
|
|
|
|
3478 | ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2) | |
|
|
|
|
3479 | நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3) | |
|
|
|
|
3480 | நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ மலை தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4) | |
|
|
|
|
3481 | ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர் ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள் ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன் காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5) | |
|
|
|
|
3482 | போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6) | |
|
|
|
|
3483 | மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலைபோல் புரள கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே (7) | |
|
|
|
|
3484 | நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும் நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8) | |
|
|
|
|
3485 | அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே (9) | |
|
|
|
|
3486 | மேய் நிரை கீழ் புக மா புரள சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10) | |
|
|
|
|
3487 | குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல் நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே (11) | |
|
|
|
|