நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல் |
3576 | அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள் சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே (1) | |
|
|
|
|
3577 | சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் கரணப் பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே (2) | |
|
|
|
|
3578 | ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக் காணேன் நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே (3) | |
|
|
|
|
3579 | ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன் கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே (4) | |
|
|
|
|
3580 | கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளியங்குடியும் மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப் படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே (5) | |
|
|
|
|
3581 | பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம் அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின் தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே (6) | |
|
|
|
|
3582 | வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என் திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே? (7) | |
|
|
|
|
3583 | என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்? குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே (8) | |
|
|
|
|
3584 | திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்? ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடைக் கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே (9) | |
|
|
|
|
3585 | கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள் மலக்கம் எய்த மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது? உரையீரே? (10) | |
|
|
|
|
3586 | உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன் உரை ஏய் சொல்தொடை ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே (11) | |
|
|
|
|