நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்) |
3609 | எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே (1) | |
|
|
|
|
3610 | திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் செருக் கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக் கெட வாளி பொழிந்த ஒருவனே (2) | |
|
|
|
|
3611 | ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து உள்ளும்தோறும் தித்திப்பான் திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப் பிரானே (3) | |
|
|
|
|
3612 | மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான் தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே (4) | |
|
|
|
|
3613 | கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்; கோயில்கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே (5) | |
|
|
|
|
3614 | கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை ஏத்த நில்லா குறிக்கொள்மின் இடரே (6) | |
|
|
|
|
3615 | கொள்மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து நண்ணு திருக்கடித்தான நகரே (7) | |
|
|
|
|
3616 | தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் வான் இந் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே ஆனவிடத்தும் என் நெஞ்சும் திருக்கடித் தான நகரும் தன தாயப் பதியே (8) | |
|
|
|
|
3617 | தாயப் பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும் மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள் ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே (9) | |
|
|
|
|
3618 | அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே (10) | |
|
|
|
|
3619 | சோலைத் திருக்கடித்தானத்து உறை திரு மாலை மதிள் குருகூர்ச் சடகோபன் சொல் பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இப் பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே (11) | |
|
|
|
|