நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல் |
| 3620 | இருத்தும் வியந்து என்னைத் தன் பொன் அடிக்கீழ் என்று அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என் தன் கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே (1) | |
|
| |
|
|
| 3621 | இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்து அற மன்னி பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே (2) | |
|
| |
|
|
| 3622 | அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் பொருள் தான் எனில் மூவுலகும் பொருள் அல்ல மருள் தான் ஈதோ? மாய மயக்கு மயக்கே? (3) | |
|
| |
|
|
| 3623 | மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரிஏறு எனது அம்மான் தூய சுடர்ச்சோதி தனது என் உள் வைத்தான் தேசம் திகழும் தன் திருவருள் செய்தே (4) | |
|
| |
|
|
| 3624 | திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தான் அது காட்டித் தந்து என் உள் திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே? (5) | |
|
| |
|
|
| 3625 | பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத் தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல் திரு மார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே? (6) | |
|
| |
|
|
| 3626 | செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே (7) | |
|
| |
|
|
| 3627 | அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரே (8) | |
|
| |
|
|
| 3628 | வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் எவரும் வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூவுலகும் தம் வயிற்றில் கொண்டு நின்றவண்ணம் நின்ற மாலை வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே (9) | |
|
| |
|
|
| 3629 | வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால் பைத்து ஏய் சுடர்ப் பாம்பு அணை நம் பரனையே (10) | |
|
| |
|
|
| 3630 | சுடர்ப் பாம்பு அணை நம் பரனை திருமாலை அடிச் சேர்வகை வண் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப் பத்தும் சன்மம் விடத் தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே (11) | |
|
| |
|
|