நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல் |
| 3686 | ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் கார் ஆயின காள நல் மேனியினன் நாரயணன் நங்கள் பிரான் அவனே (1) | |
|
| |
|
|
| 3687 | அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே (2) | |
|
| |
|
|
| 3688 | அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே (3) | |
|
| |
|
|
| 3689 | மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே (4) | |
|
| |
|
|
| 3690 | மனமே உன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்! புனம் மேவிய பூந் தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இலானை அடைவதுமே (5) | |
|
| |
|
|
| 3691 | அடைவதும் அணி ஆர் மலர் மங்கைதோள் மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவற்கே ஒருங்காகவே (6) | |
|
| |
|
|
| 3692 | ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர் ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே (7) | |
|
| |
|
|
| 3693 | இன்றிப் போக இருவினையும் கெடுத்து ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது சென்று தேவர்கள் கைதொழுவார்களே (8) | |
|
| |
|
|
| 3694 | தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை ஆதலின் பழுது இல் தொல் புகழ்ப் பாம்பு அணைப் பள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே (9) | |
|
| |
|
|
| 3695 | தாள தாமரையான் உனது உந்தியான் வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான் ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் நாளும் என் புகழ்கோ உன சீலமே? (10) | |
|
| |
|
|
| 3696 | சீலம் எல்லை இலான் அடிமேல் அணி கோலம் நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே | |
|
| |
|
|