நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல் (திருக்கண்ணபுரம்) |
3763 | மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட காலை மாலை கமல மலர் இட்டு நீர் வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே (1) | |
|
|
|
|
3764 | கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே (2) | |
|
|
|
|
3765 | தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே (3) | |
|
|
|
|
3766 | மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம் தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே (4) | |
|
|
|
|
3767 | சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத் தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே (5) | |
|
|
|
|
3768 | அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே (6) | |
|
|
|
|
3769 | மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம் செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே (7) | |
|
|
|
|
3770 | அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம் பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே (8) | |
|
|
|
|
3771 | பாதம் நாளும் பணிய தணியும் பிணி ஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை? வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே (9) | |
|
|
|
|
3772 | இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை? அல்லி மாதர் அமரும் திருமார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே (10) | |
|
|
|
|
3773 | பாடு சாராவினை பற்று அற வேண்டுவீர் மாடம் நீடு குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே (11) | |
|
|
|
|