நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல் (திருவனந்தபுரம்) |
3785 | கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே (1) | |
|
|
|
|
3786 | இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே (2) | |
|
|
|
|
3787 | ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில் தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே (3) | |
|
|
|
|
3788 | பேசுமின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே (4) | |
|
|
|
|
3789 | புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் (5) | |
|
|
|
|
3790 | அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் நமர்களோ சொல்லக் கேள்மின் நாமும் போய் நணுகவேண்டும் குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே (6) | |
|
|
|
|
3791 | துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு அணைப் பள்ளி கொண்டான் மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே (7) | |
|
|
|
|
3792 | கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம் படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம். (8) | |
|
|
|
|
3793 | நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணிய ஆன சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபுரம் தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே. (9) | |
|
|
|
|
3794 | மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம் இல் புகழினாரே (10) | |
|
|
|
|
3795 | அந்தம் இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி தன்னைக் கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள் ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே (11) | |
|
|
|
|