| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல் | 
					
			
			
      | | 3818 | கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்
 எண்ணும் திருநாமம்
 திண்ணம் நாரணமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3819 | நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன்
 வாரணம் தொலைத்த
 காரணன் தானே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3820 | தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
 தானே உண்டு உமிழ்ந்து
 தானே ஆள்வானே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3821 | ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
 தாள்வாய் மலர் இட்டு
 நாள்வாய் நாடீரே                   (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3822 | நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு
 பாடீர் அவன் நாமம்
 வீடே பெறலாமே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3823 | மேயான் வேங்கடம் காயாமலர் வண்ணன்
 பேயார் முலை உண்ட
 வாயான் மாதவனே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3824 | மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
 தீது ஒன்றும் அடையா
 ஏதம் சாராவே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3825 | சாரா ஏதங்கள் நீர் ஆர் முகில் வண்ணன்
 பேர் ஆர் ஓதுவார்
 ஆரார் அமரரே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3826 | அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
 அமரத் தொழுவார்கட்கு
 அமரா வினைகளே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3827 | வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
 சுனை நல் மலர் இட்டு
 நினைமின் நெடியானே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3828 | நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
 நொடி ஆயிரத்து இப் பத்து
 அடியார்க்கு அருள்பேறே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |