நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல் |
3818 | கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே (1) | |
|
|
|
|
3819 | நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே (2) | |
|
|
|
|
3820 | தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே (3) | |
|
|
|
|
3821 | ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே (4) | |
|
|
|
|
3822 | நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே (5) | |
|
|
|
|
3823 | மேயான் வேங்கடம் காயாமலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே (6) | |
|
|
|
|
3824 | மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே (7) | |
|
|
|
|
3825 | சாரா ஏதங்கள் நீர் ஆர் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே (8) | |
|
|
|
|
3826 | அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே (9) | |
|
|
|
|
3827 | வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே (10) | |
|
|
|
|
3828 | நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் நொடி ஆயிரத்து இப் பத்து அடியார்க்கு அருள்பேறே (11) | |
|
|
|
|