| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல் (திருப்பேர் நகர்) | 
					
			
			
      | | 3851 | திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
 குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
 திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3852 | பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
 கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
 ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3853 | பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை
 கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
 அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3854 | எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக் களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
 கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
 தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3855 | வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
 தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
 தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3856 | திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
 இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
 விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3857 | உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
 வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
 கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே?             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3858 | கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன் எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே
 வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
 திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3859 | இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்?
 குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
 ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3860 | உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
 கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு
 அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே            (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3861 | நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல் நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
 சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
 வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே (11)
 | 
 |  | 
		
			|  |  |  |