நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல் (திருப்பேர் நகர்) |
3851 | திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே (1) | |
|
|
|
|
3852 | பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே (2) | |
|
|
|
|
3853 | பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே (3) | |
|
|
|
|
3854 | எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக் களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன் கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான் தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே (4) | |
|
|
|
|
3855 | வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே (5) | |
|
|
|
|
3856 | திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே (6) | |
|
|
|
|
3857 | உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே? (7) | |
|
|
|
|
3858 | கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன் எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே (8) | |
|
|
|
|
3859 | இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்? குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே (9) | |
|
|
|
|
3860 | உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே (10) |
|
|
|
|
|
3861 | நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல் நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே (11) | |
|
|
|
|