நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே அனுபவித்துப் பேசுதல் |
3862 | சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின: ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே (1) | |
|
|
|
|
3863 | நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில் பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில் நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே (2) | |
|
|
|
|
3864 | தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே (3) | |
|
|
|
|
3865 | எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே (4) | |
|
|
|
|
3866 | மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே (5) | |
|
|
|
|
3867 | வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே (6) | |
|
|
|
|
3868 | மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே (7) | |
|
|
|
|
3869 | குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே (8) | |
|
|
|
|
3870 | வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே (9) | |
|
|
|
|
3871 | விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே (10) | |
|
|
|
|
3872 | வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே (11) | |
|
|
|
|