| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே அனுபவித்துப் பேசுதல் | 
					
			
			
      | | 3862 | சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின:
 ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
 வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3863 | நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில் பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில்
 நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
 தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3864 | தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
 எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
 வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3865 | எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
 அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
 மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3866 | மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
 கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
 வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3867 | வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
 ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
 வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3868 | மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
 கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
 குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3869 | குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள
 கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
 வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3870 | வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
 வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
 வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3871 | விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
 நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
 மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3872 | வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
 கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
 சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |