| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| பிற்சேர்க்கைப் பாடல்கள் | 
					
			
			
      | | மண்ணில் பொடிப் பூசி வண்டு இரைக்கும் பூச் சூடி பெண்ணை மடல் பிடித்துப் பின்னே அண்ணல்
 திருநறையூர் நின்ற பிரான் தேர் போகும் வீதி
 பொரு முறையால் செல்வம் புரிந்து
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் தன் அருளும் ஆகமும் தாரானேல் பின்னைப்போய்
 ஒண் துறை நீர் வேலை உலகு அறிய ஊர்வன் நான்-
 வண்டு அறை பூம் பெண்ணை மடல்
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | ஊராது ஒழியேன் உலகு அறிய ஒள்-நுதலீர் சீர் ஆர் முலைத்தடங்கள் சேரளவும் பார் எல்லாம்
 அன்று ஓங்கிநின்று அளந்தான் நின்ற திருநறையூர்
 மன்று ஓங்க ஊர்வன்-மடல்
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன-என்றும் பொன்னித் தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூங் குடந்தை
 விடம் கொண்ட வெண் பல் கருந் துத்தி செங் கண் தழல் உமிழ்வாய்
 படம் கொண்ட பாம்பு-அணைப் பள்ளிகொண்டான் திருப்பாதங்களே
 | 
 |  | 
		
			|  |  |  |