நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| தனியன்கள் |
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமாநுசன் | |
|
| |
|
|
மிக்க இறை நிலையும் மெய் ஆம் உயிர் நிலையும் தக்க நெறியும் தடை ஆகி தொக்கு இயலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் | |
|
| |
|
|
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் தனத்தாலும் ஏதும் குறைவு இலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று | |
|
| |
|
|
பக்தாம்ருதம் விஸ்வ ஜநாநுமோதநம் ஸர்வார்த்த தம் ஸ்ரீசடகோப வாங்மயம் ஸஹஸ்ர சாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம் | |
|
| |
|
|
திருவழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும் அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து | |
|
| |
|
|
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும் சீர் ஆர் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற | |
|
| |
|
|