தொடக்கம் |
நூல் வந்த வழி
|
|
|
| | 7 | அடவியால் வனப்பில் வாய்ந்த ஆகிர்த எனும் நகர்க்குள், புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி, நடவி, ஆர் தவத்தில் ஓங்கி, நாதனை ஈன்றாள் தாளைத் தடவி, ஆர்வு உயரப் போற்றி, தகவு அடைந்து இருந்தாள் அன்றோ.
| 7 |
|
|
|
|
|
|
| | 8 | பொறைஉழி சிறப்பில் வாய்ந்த, புலன் தவிர் காட்சி தன்னால், அறை மொழி இனிமை கான்ற அருள் அவிழ் வாயினாளே; நிறை மொழி மாந்தர் பூத்த நீர்மையோடு ஒழுகல் செய்து, மறை மொழி வாய்மை காட்டும் மாண்பு உடை அறத்தினாளே.
| 8 |
|
|
|
|
|
|
| | 9 | சீது அருள் உடுக்கள் ஊடு திங்களைப் போல, கன்னி மாதருள் அரிய மாண்பால் வயங்கினாள்; அன்றித் தன்னில் கோது அருள் குறை அற்று, உம்பர் குழுவினுக்கு எந்தை அண்டம் மீது அருள் காட்சி பூத்து, வேதியர்க்கு ஒளியே போன்றாள்.
| 9 |
|
|
|
|
|
|
| | 10 | இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து, வளம் கொடு நட்புக் காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள்; விளங்கு ஒளி உடுத்த மேனி, வெண் மதி மிதித்த பாதம், உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே.
| 10 |
|
|
|
|
|
|
| | 11 | இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை, பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து, உரைத்த அன்னவை எவரும் கேட்ப அவை வரை(க) என்றாள் தாயும். சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந்திட்டாளே.
| 11 |
|
|
|
|
|
|
| | 12 | வருந்திய நசையால், நானும் வரைந்தவை வரைந்து காட்ட, திருந்திய தமிழ்ச் சொல் இல்லால், செவிப் புலன் கைப்ப நல்லோர் பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தைப் பாராது, அருந்திய அமுது நன்றேல், அருத்தியோடு அருந்தல் செய்வார்.
| 12 |
|
|
|
|
|
|
| | 13 | சீரிய மறை நூல் பூண்ட செழும் தவத்து அரிய மாட்சி நேரிய உளத்தில் ஓங்கி, நேமி காத்தவனைக் காத்த, வேரி அம் கொடியோன் காதை விளம்ப, அக் கொடி விள் பைம்பூ , ஆரியனூரில், தேம்பாவணி எனப் பிணித்தல் செய்வாம்.
| 13 |
|
|
|
|
|