| வேற்றுமையில் - நூற்பா எண். 22 | 153 |
மூன்றனுள் கருதப்படுவன 34 | முதல்துணை ஞாபகம் காரகம் ஏது வினையே நிமித்தம் வேற்றுமை வினைமுதல் காலம்ஆ திகளைஇம் மூன்றனுள் கருதுவர். |
[வி-ரை: முதற்காரணம், துணைக்காரணம், ஞாபகஏது, காரகஏது, வினைக்காரணம், நிமித்தகாரணம், வேற்றுமைக் காரணம், வினைமுதற்காரணம், காலக்காரணம் முதலியன மூன்றாம் வேற்றுமைக் கருவிக்கண் அடங்கும். மண்ணான் இயன்றகுடம் - மண்முதற்காரணம்; முதற்காரண மாவது காரியத்தோடு தொடர்பு உடையது. திரிகையான் இயன்றகுடம் - திரிகை துணைக்காரணம். முயற்சியிற்பிறத்தலான் ஒலி நிலையாது - பிறத்தல் ஞாபக ஏது; பிறந்த பொருள் எதுவும் நிலைபெறாது என்பது அறிவான் அறிதலின் இது ஞாபகஏது ஆயிற்று. வாணிகத்தான் ஆயினான் - வாணிகம் காரகஏது; வாணிகம் என்ற தொழில் செல்வத்திற்குக் காரணமாயிற்று. ‘ஆகூழால் தோன்றும் அசைவின்மை’. ஆகூழ் வினைஏது; அசைவின்மைக்கு நல்வினை காரணமாதலின். இனி, சாத்தன் கைஎழுதுமாறு வல்லன்; அதனால் தந்தை உவக்கும் என்புழி, தந்தை உவத்தற்குச் சாத்தன் கை எழுதுமாறு வல்லனாம் வினை காரணமாதலின், சாத்தன் கையெழுதுமாறு வல்லனாதல் வினைக்காரணம் என்பதும் ஆம். ‘நாணால் உயிரைத் துறப்பர்’ - உயிர் துறத்தல் நாணைக் காத்தற்பொருட்டாதலின், உயிர் துறத்தலுக்கு நாண் நிமித்த காரணம் ஆயிற்று. குயவனால் குடம் செய்யப்பட்டது என்பதும் அது. நெய்யால் எரியை அவித்தல். |