பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 6, 7261

வருதலின், பொருள் துணிதற்குக் கருவியாகிய உருபு முதலிய விரி வேண்டும் என்பது தெளிக. தொகுக்கினும் வல்லுநர் தொகுக்கில் பொருந்தும்; வல்லார் தொகுக்கில் பொருந்தாது. எனவே, வழு - வழுவி அமைந்தது - வழுவற்றது எனத் தொகை நிலை மூன்று என்பது தெளிக.

[வி-ரை: தொகாநிலைச் சிறப்பு இந்நூற்பாவால் கூறப்பட்டது.] 6

தொகையில் பொருள்

92தொகில்ஒரு பொருள்முதல் எழுபொருள் வரைதரும்.

என்பது வெளி.

[வி-ரை:

‘தொக்குழி மயங்குந இரண்டு முதல்ஏழ்
எல்லைப் பொருளின் மயங்கும் என்ப’                               - ந. 373

என்ற நன்னூல் நூற்பாவை அடியொற்றி எழுந்த நூற்பா இது

எ-டு:

தெய்வ வணக்கம்-தெய்வத்தை வணங்கும் வணக்கம்,
தெய்வத்துக்கு வணக்கம்.

கடிப்பகை-கடிக்குப்பகை,
கடியினது பகை,
கடியாகிய பகை,

சொல்லிலக்கணம்-சொல்லினது இலக்கணம்,
சொற்கு இலக்கணம்,
சொல்லின்கண் இலக்கணம்,
சொல்லிலக்கணம் சொன்ன நூல்

பொன்மணி -பொன்னின் ஆகிய மணி,
பொன்னாகிய மணி,
பொன்னின்கண் மணி,
பொன்னொடு சேர்ந்த மணி,
பொன்னும் மணியும்