பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 11267

10. செய்தான் மாடம் - மாடத்தை - கடைத்தொக்கது.

இருந்தான் குன்றம் - குன்றத்துக்கண் - கடைத்தொக்கது

அன்பு அருள் இருக்கும் அறவோரிடத்தே - அன்பும்
அருளும் இருக்கும் எனச் சொல்லின் கடையிலும்,
தொடரின் இடையிலும் தொக்கது.

[வி-ரை: சொல்லின் கடைக்கு அருளும் என்பதனையும், தொடரின் இடைக்கு அன்பும் என்பதனையும் கொள்க.]

‘ஆதி’ என்றதனால்,

வடுகங்கண்ணன் - வடுகனுக்கு மகனாகிய கண்ணன்

கவிழ்தும்பை - கவிழ்ந்த பூவை உடைய தும்பை.

ஆந்தை, பூந்தை - ஆதனுக்குத் தந்தை, பூதனுக்குத் தந்தை - இவை முதலிய பெரும்பாலும் விரியும்.

தனித்தனி சிறப்பித்தால் விரிதல் நோக்கி, ‘அறுவகைத் தொகையும்’ எனப் பொதுபடக் கூறிச் சுருக்கினம் என்க.

[வி-ரை: வடுகக்கண்ணன், வடுகங்கண்ணன் என்பனவற்றிற்கு விதி,

‘வல்லொற்று வரினே இடத்தொகை யாகும்
மெல்லொற்ற வரினே பெயர்த்தொகை யாகும்’                         - ந. 371

என்பது.

ஆந்தை, பூந்தை என்பனவற்றிற்கு விதி.
‘இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய் ஒழித்து அகரம் நிலையும்
மெய் ஒழித்து அன்கெடும் அவ்வியற் பெயரே’                   - தொ. எ. 347

‘ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயரொற்று அகரம் துவரக் கெடுமே ’                         - தொ. எ. 348

என்பன.