பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 19149

நஞ்சினைக்கலந்த பாலைக் குடித்தான்.

கத்தரிக்காயையும் புழுவையும் கறித்தான்.

பதரையும் நெல்லையும் பணத்திற்குக் கொண்டான்.

- இவை கருத்துடமை, கருத்தின்மை என்ற இருமையும் ஆயின.

ஆரியனை ஐயுற்ற பொருளை வினாவினான்.

பசுவினைப் பாலினைக் கறந்தான்.

யானையைக் கோட்டைக் குறைத்தான்.

- இவை ஈருருபு இணைந்தன. பசுவினது பாலினை - யானையது கோட்டை - என்பனபோல, ஆரியனது ஐயுற்ற பொருளை என வாராமையின், ஈருருபு இணைதலில் இருவகை உண்மை தோன்ற இருவகைப்பட்டு ஈருருபு இணைதல் என்றாம்.

தன்னைப் புகழ்ந்தான்.

தன்னைக் குத்தினான்.

தன்னைப் பேணினான்.

தன்னைக் காதலித்தான் - கருத்தாவாதல்.

வருதலைச் செய்தான் - அகநிலைச் செயப்படுபொருள்.

மாடம் செய்யப்பட்டது - தெரிநிலைச் செயப்படுபொருள்.

தெரிநிலையாவது வினைமுதல் உருபு ஏற்றும் செயப்படு பொருளே எனத் தெரியநிற்றல். இது தெரிநிலை எனவே ஏனைய தெரியாநிலை என்க. தெரிநிலை, தெரியாநிலை - வடமொழி வழக்கு.

எயிலை இழைத்தான் - இயற்றப்படுதல்.

பொருளைப்பெற்றான் - எய்தப்படுதல்.

கயிற்றை அறுத்தான் - வேறுபடுக்கப்படுதல் - முதலியன அவற்றுள் அடங்கும்.