பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 38, 39169

இடத்தின்கண் பல உருபு வருதல்

50+ஒன்றுஇ ரண்டுநான்கு ஏழொடு இடம்எழும்.

எ-டு:

தூண் போதிகை தொட்டது - முதல்;

தூணைச் சார்ந்தான் - இரண்டாவது;

இன்றைக்கு, நாளைக்கு, பகலைக்கு, அந்திக்கு, சந்திக்கு, மாலைக்கு, காலைக்கு, ஊர்க்கு, வீட்டிற்கு வருவன் - நான்காவது;

தூணின்கண் சார்ந்தான் - ஏழாவது;

என முறையே காண்க.

[வி-ரை: தூணின்கண் போதிகை தொட்டது, துணின்கண் சார்ந்தான், இன்றைக்கண், நாளைக்கண், பகற்கண், அந்திக்கண், சந்திக்கண், மாலைக்கண், காலைக்கண், ஊர்க்கண், வீட்டின்கண் வருவன் என ஏழாவது விரித்துநோக்கி, ஏழாவதன் பொருட்கண் ஏனைய முதல் இரண்டு நான்குஆம் வேற்றுமைகள் வருமாறு காண்க. பகலை என்பது - பகல் என்பதன் வழக்குச்சொல்.] 38

இனி, முற்கூறிய பொது இலக்கணங்களுள் உருபும் உரிமையாய் நிற்றலும் ஆகிய ஈரிலக்கணமும் ஒருங்கேதோன்றவும், உருபுகள் தமக்கு உரிய பொருள் அல்லனவற்றையும் உணர்த்தல் தோன்றவும், வினைமுதல் முதலாகச் சிறப்புச்சூத்திரம் செய்கின்றோம்.

உருபு பொருள்தரும் வரையறை

51ஓர்உரு பிற்குஓர் பொருளே உரிமை
வேறு பொருளையும் விளம்பும் என்க.

இவ்விரு விதியும் தத்தம் சிறப்புச்சூத்திரத்துட் காண்க.


+ நன்னூல்317. முனிவர் உரை.