| வினையியல் - நூற்பா எண். 18 | 225 |
விளக்குக் காட்டிற்று; நோன்பிற்குக் காப்பு கட்டினான்; மகற்குப் பொற்காப்பு அணிந்தான்; எனக்கு இவ்வேல் காப்பு; உனக்கு இவ்வரண் காப்பு; அவற்கு இவ்வாள் காப்பு; -எனத் தொழிற்பெயர் கருவியாயிற்று; கிடக்கை உயர்ந்தது; படுக்கை தாழ்ந்தது; -எனத் தொழிற் பெயர் இடமாயிற்று; பொருள் செயல்வகை (செய்யும் வகை) வினை செயல்வகை (செய்யும் வகை) ‘தோன்றலாறே’ தொ. சொ. 160. (தோன்றும் ஆறே) ‘உயிர்த்த லாறே’ தொ. எ. 17. (உயிர்க்கும் ஆறே) -எனத் தொழிற்பெயர் பெயரெச்சமாயிற்று. ‘ஆய்தம் கெடுதல் ஆவயினான’ தொ. எ. 200. (கெடுதல் - கெடுக) ‘மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல்’ தொ. எ. 104. (நிலையல் - நிலைபெறுக) எனவும். ‘ஏற்றான்புள் ஊர்ந்தான் எயிலெரித்தான் மார்பிடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான் நீள்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு: திவ்.பிர 2155 (காப்பு-காப்பாவான்) எனவும் தொழிற்பெயர் வினைமுற்றாயிற்று. இவ்வாறு தொழிற்பெயராவது வினைமுதல்ஆதி முற்று ஈறாக ஆறு பொருள்பட்டது காண்க. |