| ஒழிபியல் - நூற்பா எண். 23, 24 | 291 |
‘பாடினான் தேவகீதம் பண்ணினுக்கு அரசன்’ - சீவக. 2061 ‘குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி’ - திவ். பிர. 2986 அடுஞ் செந்நெற்சோறு. ‘உப்பின்று புற்கை உண்க’ ‘அளமரு குயிலினம் அழுங்கிப் பூம்பொழில் உளமெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே’ - சீவக. 49 -இவை சிறுபான்மை பொருந்துவன. ‘காமனை எரித்த கணபதி தந்தை வாம தேவன் அடியிணை பணிவாம்’ என்றால் காமனை எரித்தல் கணபதிக்க இன்மையின் இது பொருந்தாது. ‘காமனை எரித்த வாம தேவன் கணபதி தந்தை மலரடி பணிவாம் ’ இது பொருந்தும் ... ... ... இவை எல்லாம் அண்மைநிலை அல்லது பெறாமை காண்க.’’ - பி. வி. 19 உரை. ஒருகால் பொருந்தும் என்றது - இடை நின்ற சொற்களோடு தொடராது, முடிக்குஞ் சொல்லோடு பொருள் இயையுமிடத்துப் பொருந்தும் என்பது.] 23 வழுவுடைப் புணர்ச்சி 110 | வழுவுடைப் புணர்ச்சியைப் பலர்விரித் தலின்இலம். |
எழுத்தினுள் விலக்கியனவும், சொல்லினுள் திணைவழு முதலியனவும் என்க. [வி-ரை: இவற்றைத் தொல்காப்பியம் முதலிய நூல்கள் விரித்துக் கூறியுள்ளன.] 24 |