பக்கம் எண் :

320இலக்கணக் கொத்து 

நால்வகைச் சந்தி

118வேற்றுமை வழியோடு அல்வழி அன்றியும்
அவ்விரு வழியும் அடங்கும் பொதுவழி
அம்மூன் றுள்ளே அடங்கா வழியும்
எனநான்கு என்றே இயம்புவர் சந்தி.

பொதுவழி கொண்டது என்எனின் - பொதுத்திணை, பொதுப்பால், பொதுப்பெயர், பொதுவினை, பொதுக்காலம், பொது எச்சம், பொது முற்று, பொது இடம் முதலியவற்றைத் தேர்ந்து கொள்க.

[வி-ரை: பொதுத்திணை - உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய்ச் சொல்லமைப்பில் உள்ளது. சாத்தன் பொதுத்திணை. அது வந்தான் என்ற வினை கொண்டு முடியின் உயர்திணை ஆகும்; வந்தது என்ற வினை கொண்டு முடியின் அஃறிணையாகும்.

பொதுப்பால் - ஆண், பெண், இரண்டனையும் சுட்டும் தெய்வம் முதலிய சொற்கள் பொதுப்பாலாம்.

பொதுப் பெயர்
-
ஒரு சாதிக்குப் பொதுவாக அமைந்த மரம் முதலிய பெயர்கள், தென்னை முதலியன சிறப்புப் பெயர்களாம்.
பொது வினை
-
இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாகிய வேறு - இல்லை - உண்டு - யார் -வேண்டும் - தகும் - படும் முதலியன.
பொதுக்காலம்
-
வேறு இல்லை உண்டு முதலிய பொதுவினைகள் முக்காலங்களுக்கும் பொதுவாய்க் காலத்தைக் குறிப்பாகக் காட்டலின் இவை குறிப்பிடும் காலம் பொதுக் காலம்.

ஏனைய இவ்வாசிரியராய் விளக்கப்பட்டுள்ளன.]