எ-டு: முதல், ஈறு, ஒற்று, அழுக்காறு - இவைபோல்வன எல்லாம் முதல்நிலை. முதலும். இறும், ஒற்றும், ‘கொடுப்பது அழுக்கறுப்பான்’ - குறள் 166 -இவைபோல்வன எல்லாம் முற்று முதலுதல், இறுதல், ஒற்றுதல், அழுக்கறுத்தல் - இவை போல்வன எல்லாம் தொழிற்பெயர். ‘நாவலொடு பெயரிய பொலம்’ - முருகு. 18 ‘ஐ எனப் பெயரிய வேற்றுமைக்கிளவி’ - தொ.சொ. 71 ‘அழகிய சொக்கர்’ ‘முதலிய எழுத்து’ ‘இற்ற பதம்’ ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர்’ -தொ.எ. 296 ‘அழுக்கற்ற பாவி’ -இவைபோல்வன எல்லாம் பெயரெச்சம். அகரம் முதலிநிற்கும்; னகரம் இற்று நிற்கும்; மெய்கள் எல்லாம் ஒற்றி நடக்கும் ‘அழுக்கற்று அகன்றாரும் இல்லை’ -கு. 170 -இவைபோல்வன எல்லாம் வினையெச்சம். இங்ஙனம் ஐந்து வகையாய் வந்த வினையெல்லாம் பெயரடி யாகப் பிறந்த வினை. நட, நடத்தல், நடந்தான், நடந்த சாத்தன், நடந்துவந்தான் - இவை ஐந்தும் வினையடியாகப் பிறந்த வினை. |