கற்கப்படு மாணாக்கன் - கற்கும் மாணாக்கன்; கற்கப்படா மாணாக்கன் - கற்கா மாணாக்கன்; எனப் படுசொற்குப் படுபொருள் வாராமை உணரப்படும்] 6 | பெயர்பின் வினையெச் சத்தின் பின்னர்ப் படுசொல் வந்தே வேறுபொருள் பட்டும் இயலும்
|
எ-டு: ‘மறை இறந்து மன்று படும்’ - கு. 1138 ‘போற்றினும் பொத்துப்படும்’ -கு. 468 ‘சொற்பொருள் சோர்வு படும்’ - (கு.1046)பெயர்ப்பின் படு; ‘துன்பங்கள் சென்று படும்’ - (கு. 1045) வினையெச்சத்தின் பின் படு. இவற்றுள் இரண்டன் பின்வரும் உண்டாம் என்றே வேறு பொருள்பட்டது காண்க. ‘இலம்படு புலவர் ஏற்றகை நிறைய’ - மலைபடு 576 என்பதும் அது. இனைத்தென அறிந்த பொருட்கு உம்மை படும்; இன்என் உருபிற்கு இன்என் சாரியை இன்மை படும் - இரண்டும் பெயர்ப்பின் படு. ‘ஒளியோடு ஒழுகப்படும்’ - கு. 698 ‘வஞ்சரை அஞ்சப்படும்’ -கு. 824 மெய் சொல்லப்படும். ஆசை நீக்கப்படும் - இவை வினையெச்சத்தின் பின் படு. இவற்றுள் இரண்டன் பின்னரும் வேண்டுவது தக்கது என்றே வேறு பொருள் பட்டது காண்க. இதனை, ‘வேறில்லை உண்டியார் வேண்டும் தகும் படும்’ - (85) என்னும் சூத்திரத்தினும் விளக்குதும். |