உடம்பொடுபுணர்த்தல் - நூற்பாவிலேயே ஒரு செய்தியை யாப்பில் அமைத்துப் பின்னோர் பின்பற்ற வாய்ப்பளித்தல். இலேசு - மிகைச்சொல். குறை - கூறாது விடுக்கப்பட்ட சொல். வேண்டா கூறல் - பின்வேண்டியது விளைக்கத் தேவையற்ற ஒன்றை ‘குறையை இன்னும் கூறின் பெருகும்’ (41) என்பது போலக் கூறுதல். ‘‘ஏனை உயிரே’ ‘ஏனைப்புள்ளி’ - தொ. சொ. 124, 129 என்ற விளிமரபுச் சூத்திரங்களும் அது. தாற்பரியம் - நேரிய பொருளன்றிப் போந்த பொருள். செய்யுள்விகாரம் - வலித்தல் முதலிய ஆறும், மூவகைக்குறையும் ஆகிய ஒன்பது. இருவகை வழக்கு - உலக வழக்கு, செய்யுள் வழக்கு. ‘இலக்கணமுடையது’ -ந. 267. என்ற நூற்பாவில் கூறும் இயல்பு வழக்கும் தகுதி வழக்குமாம். திசை வழக்கு - ‘திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்’ -தொ. சொ. 449. என்பது போல்வன. மரூஉ மொழி - ‘மருவின் தொகுதி’ ‘மீஎன மரீ இய’ ‘முன்என்கிளவி’ ‘வழங்கியல் மருங்கின்’ -தொ.எ. 111, 250, 355, 483. முதலிய நூற்பாக்களால் சுட்டப்பட்டவை. பொதுவிதி, சிறப்புவிதி, தன்மதம் - வெளிப்படை. பிறர்மதம், ‘பண்ணைத் தோன்றிய’ -தொ.பொ. 239 முதலிய நூற்பாக்கள் போல்வன. வினை - மாப் பூத்தது; சார்பு - கவசமணிந்து மாக்கொணா என்பது; இனம் - மாவும் மருதும் ஓங்கின; இடம் - மாமறுத்த ‘வினைசார்பு இனம் இடம்’ - ந. 395 என்ற நூற்பாவைக் காண்க. |