| ஒழிபியல் - நூற்பா எண். 45, 46 | 349 |
‘கடுமொழியும்.............அரம்’ - (கு. 567) என்புழி, அரம் என்னும் ஒருமைப் பெயரை வாக்கிய பேதமாகத்தனித்தனி கூட்டி முடிப்பதனைக் தேர் வடம் இழுப்பார்போலப் ‘பிரத்யேக பந்தாந் நுவயம்’ என்பர்’’ என்று குறிப்பிட்ட செய்திகளை இவ்வாசிரியர் உட்கொண்டுள்ளமை காண்க.] 44 நூற்புறனடை 131 | இலக்கணம் இலக்கியம் உரைஎனப் பெயர்பட்டு இருக்கும் என்று எண்ணுக செய்யுளின் இயல்பே.
|
இலக்கணமும் உரையும் செய்யுளாமோ எனின், ‘சூத்திரம் குறித்த யாப்பிற் றாகும்’ ‘பல்வகைத் தாதுவின்’ - ந. 268 ‘நூற்பா அகவல்’ எனப் பலரும் ஓதுதலானும். ‘சூத்திரமும் செய்யுளாகலின்’ என நச்சினார்க்கினியர் எழுதுதலானும், [இப்பாயிரமும் செய்யுளாகலின் இங்ஙனம் மாட்டுறுப்பு நிகழக் கூறினார். தொ. சி. பா. நச்.] ‘விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும்’ (பரி. உரை) ‘பொருப்பு வில்லபா விருப்பம் இவரே’ என வாசகங்களைச் செய்யுள் உறுப்புத்தோன்ற எழுதுதலானும், உண்டான் தின்றான் ஓடினான் பாடினான்’ என உதாரணங்களை அவ்வுறுப்புத்தோன்ற எழுதுதலானும் இலக்கணச் செய்யுள் - இலக்கியச்செய்யுள் - உரைச்செய்யுள் - |