பக்கம் எண் :

98இலக்கணக் கொத்து 

அநுவாதம் என்றே கொள்க. கூறியது கூறல் வெளி. ஏனையது எங்ஙனமெனின், யாதானும் ஒரு நிமித்தத்தால் ஒன்றனை முற்கூறி வேறொரு நிமித்தத்தால் அதனையே பின்னும் கூறல் என்க.

‘நின்ற உயிர்முன் கசதப மிகும்’                                     - ந. 165

என்று கூறினவர் தாமே,

‘பலசில எனும்இவை தம்முன் தாம்வரின் - மிகும்’                      - ந. 170

‘அல்வழி இஐ முன்னராயின் - மிகும்’                                - ந. 176

‘மீக்கு வலி மிகும்’                                                - ந. 178

‘நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள்
டற-வொற்று இரட்டும் வேற்றுமை மிகவே’                             - ந. 183

‘பனைமுன் கொடிவரின் மிகும்’                                      - ந. 203

என்று பின்னும் கூறினார்.

‘அன்ஆன் அள்ஆள்’                                              - ந. 140

என்றவர்தாமே’

‘என்ஏன் அல்அன்’                                                - ந. 140

என்றார்.

அன்ஆன் இறுமொழி’                                              - ந. 325

என்றவர் தாமே,

‘அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற’                                  - ந. 331

என்றார்.

‘நேர் நிரை’                                                     - ய. கா. 5

என்றவர் தாமே,

‘வேல் நிறம்’                                                    - யா. கா. 5

என்றும்,

‘நாள், மலர்’                                                    - யா. கா. 7

என்றும் கூறினார்.