| வினையியல் - நூற்பா எண். 14 | 211 |
முத்தும் எழுதப்பட்டு - வினையெச்சம். இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் - வினைமுதல். ஊராரால் உண்ணப்படுவதாகிய நீர் - செயப்படுபொருள். எழுத்தாணி எழுதப்பட்டது - கருவி. என அவ்வெட்டனுள் படுசொல் அணைந்து வந்தது காண்க. [வி-ரை: முதல்நிலை முதலிய ஏழனோடு ‘ஆதி’ என்ற மிகை யாற்கொண்ட கருவியும் கூட்ட எட்டாமாறு காண்க.] 5 | முற்று தொழிற்பெயர் முதலினுள் படுசொல் வரினும் படுபொருள் வருதல் இன்றாயும் இயலும்
|
‘உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்’ - கு. 921 என்புழி, உட்கார் எனவே பொருள்படுதலின் படு சொற்குப் படுபொருள் வாராமை காண்க. ‘பெயரெழுவாய் வேற்றுமையாம் பின்பதுதான் ஆறு பயனிலையும் ஏற்கப் படுதல்’ -நே.சொ. 17 என்புழி ஏற்றல் என்றே பொருள்படுதலின் படுசொற்குப் படுபொருள் வாராமை காண்க. ‘முதல்’ என்றதனால், உண்ணப்பட்ட சாத்தன் - உண்ணப்பட்டு வந்த சாத்தன் என்பன ஒரோவழி உண்ட சாத்தன் - உண்டு வந்த சாத்தன் எனவே பொருள்படுதலின் ஈரெச்சத்தினுள்ளும் கொள்க. கற்பிக்கப்படும் ஆசான், கற்பிக்கப்படா ஆசான், கற்கப்படு மாணாக்கன், கற்கப்படா மாணாக்கன் என்பனவும் அது. [வி-ரை: கற்பிக்கப்படும் ஆசான் - கற்பிக்கும் ஆசான்; கற்பிக்கப்படா ஆசான் - கற்பிக்கா ஆசான்; |