பக்கம் எண் :

224இலக்கணக் கொத்து 

தொழிற்பெயர், முற்று, எச்சம் பற்றி ஒருசாரார் கருத்து.

82தொழிற்பெயர் வினைமுதல் செயப்படு பொருளே
கருவி இடம்பெய ரெச்சம்முற்று ஆகலும்,
இருவகை முற்றும் ஈரெச்சம் ஆகலும்
இருவகை எச்சமும் முற்றே ஆகலும்
உளஎன மொழிப ஒரோவழிப் புலவர்.
 

[வி-ரை: தொழிற்பெயரானது எழுவாய், செயப்படுபொருள், கருவி, இடம், பெயரெச்சம், முற்று என்ற ஆறு நிலையில் வரும்; தெரிநிலைமுற்றும் குறிப்புமுற்றும் ஒவ்வொன்றும் பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும் வரும்; பெயரெச்சமும் வினையெச்சமும் ஒவ்வொன்றும் முற்றாகவும் வரும் என்று ஒருசாரார் கூறுவர்.]

‘ஒரோ வழி’ என்றதனால் எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததன்று. இக்கருத்து ‘எழுத்துச் சொல்திரிபு இரண்டே யன்றி’ (125) என்னும் சூத்திரத்தில் காட்டுதும்.

எ-டு:

பறவை பறந்தது;

அன்பரிடத்துக் கொடை தோன்றிற்று;

‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்’                                             - கு. 510

-எனத் தொழிற்பெயர் வினைமுதலாயிற்று;

உடுக்கை கிழிந்தது;

நடக்கை வந்தது;

புழுக்கல் உண்டான்;

-எனத் தொழிற்பெயர் செயப்படுபொருளாயிற்று;