பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 19229

‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு’ ’                                       - கு. 339

இவ்விரண்டும் பாவமான வினைமுற்றுப் பெயர்.

‘வேல் அன்று வென்றி தருவது’                                     - கு. 546

- இது கரணமான வினைமுற்றுப் பெயர்.

‘பற்றியார் வெல்வது அரண்’                                       - கு. 747

‘ஆற்ற விளைவது நாடு’                                           - கு. 732

யாம் இருப்பது உறையூர்

- இம்மூன்றும் அதிகரணமான வினைமுற்றுப் பெயர்.

‘உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்’                           - கு. 850

என்பது உயர்திணையில் கருத்தாவான வினைமுற்றுப் பெயர்.

‘இல்வாழ்வான் என்பான்’                                           - கு. 41

என்பது உயர்திணையில் கருமமான வினைமுற்றுப் பெயர்.

இவற்றைத் தொல்காப்பியர்

‘தொழில்நிலை ஒட்டும் ஒன்று’                                      - சொ.70

என்பர். ஒழிந்தன வந்துழிக் காண்க’’ என்று கூறப்பட்டவற்றுள் ‘வெல்வது அரண்’ என்பதன் இலக்கணத்தில் கருத்துவேற்றுமை உண்மையும், ஏனைய இவ்வாசிரியருக்கும் உடன்பாடாதலும் காண்க.]

2எட்டு உருபு ஏற்றே எண்பொரு ளாதல்

எ-டு:

‘மாணடி சேர்ந்தார் வாழ்வார்’                                         -கு. 3

‘ஒறுத்தாரை ஒன்றாக வையாரே’                                     - கு. 155

கொண்டானால் வாழ்ந்தாள் குலமகள்;

‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்’                                   - கு. 156

ஈன்றாளின் நீங்கினாள் இவன் நிமித்தம்;