‘ழகர உகரம் நீடிடன் உடைத்தே உகரம் வருதல் ஆவயி னான’ - தொ. எ. 261 எனச் சூத்திரம் செய்து, ‘பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி’ - குறுந் 180 என உதாரணம் காட்டுவர். அதுவே உபலக்கணமாக நாலடியில் ‘விராஅய்ச் செய்யாமை நன்று’ - நா. 246 ‘நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம்' - நா. 124 என்றும், திருவள்ளுவர் குறளில், ‘துப்பாய தூஉம் மழை’ - கு. 12 ‘நீங்கில் தெறூஉம் குறுகுங்கால்’ கு. 1104 என்றும் குற்றெழுத்து நிற்கும் இடத்தும் சிறுபான்மை அசை நிலையாக அளபெடுத்து வந்தது காண்க. குரீஇ, உடீஇ என வரும் இறுதிநிலை அளபெடையும் அது. இனித் தமிழ் நூலார், ‘நூறோ ஒ ஒ ஒ நூ றென்பாள் துடங்கிடைக்கும் மென் மாறோமால் அன்றளந்த மண்’ [முலைக்கும் ‘உப்போஒஒஒ எனஉரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்(கு) ஒப்போநீர் வேலி உலகு’ என இசை விளி பண்டமாற்றாயினவற்றை இயற்கையளபெடை என்றும், ‘கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகிர்’ - கு. 1087 ‘செறாஅஅய் வாழிய நெஞ்சு’ - கு. 1200 எனக் காரியம் உள்வழி வரும் அசைநிலை அளபெடையைச் செயற்கையளபெடை என்றும் கூறுவர்’’ என ஐந்தாம் காரிகை உரையுள் உரைத்தனவற்றையும் நோக்குக.] 4 |