பக்கம் எண் :

200இலக்கணக் கொத்து 

‘கடுத்தது காட்டும் முகம்’                                           -கு. 706

‘ஞகாரை ஒற்றிய்’                                              -தொ.எ. 297

‘கரும்பை ஒத்தாள்’                                              -சீவக. 191

எனப் பலவகைப் பெயரடியானும் பிறந்த வினை வருதல் காண்க- என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க.]

வினை வகைகள்

69முதல்நிலை தொழிற்பெயர் முற்று ஈரெச்சம்என்று
ஐவகை யுள்ளே அடங்கும் வினையே.

என்பது வெளி.

[வி-ரை: வினையானது முதல்நிலைத் தொழிற்பெயர், விகுதி பெற்ற தொழிற்பெயர், முற்று, பெயரெச்சம் வினையெச்சம் என்ற ஐவகை யுள்ளே அடங்கும்]

முதல்நிலை பகுக்க இயலாத்தொழிற் பெயர்கள்

70முதல்நிலை இன்றியும் தொழிற்பெயர் மொழிகுவர்.

எ-டு: பூசல், வேட்டை, சண்டை, கூத்து, தொழில், வினை, ஆசை, வேட்கை, அவா, சூது, வாது, தச்சு, கொல்லு, நெட்டி எனவரும். பட்டினியும் அது.

[வி-ரை: வேட்டை என்பதன் பகுதி வேடு என்பது நச்சினார்க்கினியர் கருத்துப்போலும். (சீவக.426 உரை.)] 6

பிறவினை வகை

71முதல்நிலை திரிந்தும் திரியா தாகியும்
இருவகை ஆகிய இவ்வினை யீற்றின்
வி-பி இணைந்து வெவ்வேறு அணைந்தும்
இயன்றுஎண் வகையாம் பிறவினை என்ப
‘இயன்று எண் வகையாம் செய்விஎன் ஏவல்’

-எனப்பாடம் ஓதுதலும் ஒன்று.