பக்கம் எண் :

220இலக்கணக் கொத்து 

[வி-ரை:

தூசியோடு பாலைப் பருகினான்.

பாலைப் பருகுதல் - அறிந்து செய்வினை;

தூசியை உண்ணல் - அறியாது செய்வினை.]

அசேதனம் செய்வினையாவது, அறிவற்ற பொருளினது வினை.

எ-டு:

விளக்குக் காட்டிற்று.

இருட்டு மறைத்தது.

விடம் கொன்றது.

கள்ளு மயக்கிற்று.

மருந்து பிழைப்பித்தது.

பூமி தாங்கிற்று.

ஆற்றுநீர் ஈர்த்தது.

தீச் சுட்டது.

காற்று அலைத்தது. உதிர்த்தது

நிழல் ஓடிற்று, திரும்பிற்று, நீண்டது, குறுகிற்று.

கரும்பு இனித்தது.

வேம்பு கசந்தது.

- என வரும்.

4தீவினை நல்வினை சிலமுறை திறம்பி

முறை திறம்பலாவது மாறுபட்டு நிற்றல்.

எ-டு:

சம்பந்தர் எண்ணாயிரவரைக் கழுவில் ஏற்றினார்.

சுந்தரர் ஆண்டவனைத் தூதாக அஞ்சாது நடத்தினார்.

அப்பர் தாம் கொண்ட (சமண) விரதம் அழித்தனர்.

சாக்கியர் கடவுளை நாடொறும் கல்லால் எறிந்தார்.

திண்ணனார் ஆண்டவன் தலையில் அடியால் மிதித்தனர்.

- இவை தீவினை நல்வினையாயின.