| ஒழிபியல் - நூற்பா எண். 17, 18 | 279 |
பொற்பணி - ஆகப்பணி - [பொன், ஆடகம் - பெயர் ஒற்றுமை] தொட்டான் - தீண்டினான் - [தொடு, தீண்டு - வினை ஒற்றுமை] அதுவோ - அது கொல் - [ஓ, கொல் அடை ஒற்றுமை] ‘கறுப்பும் சிவப்பும்வெகுளிப் பொருள’ - தொ. சொ. 372 [கறுப்பு, சிவப்பு என்ற உரி ஒற்றுமை] சிவன் நஞ்சுதின்றான் அரன் விடம் உண்டான் | - | [நிலை மொழியும் வருமொழியும் ஆன தொடர் ஒற்றுமை]
|
என்று முறையே காண்க. [வி-ரை: இவற்றைப் பரயோக விவேகநூலார், பொருள் வேறுபடாது சொல் வேறுபட்ட சரூபசிலிட்டம் என்று குறிப்பிட்டு, அஃது அது, இஃது இது, உஃது உது என எடுத்துக்காட்டுத்தந்து சுருங்கக் கூறியுள்ளார். - 40 உரை] 17 எழுத்துச்சாரியை 104 | ஓரெழுத் திற்கே ஒருசா ரியையும்1 ஓரெழுத் திற்கே பலசா ரியையும்2 பலஎழுத் திற்கே ஒருசா ரியையும்3 தொடர்ந்தபல் லெழுத்திற்கு ஒருசாரியையும்4 சாரியை இன்றித் தனித்தும்5தொடர்ந்தும்6 தொடர்பினுள் சாரியை கலந்து தோன்றியும்7 வரும்என மொழிப வழக்கறிந் தோரே.
| |
எ-டு: 1. ‘வல்லெழுத் தென்ப கசட தபற’ - தொ. எ. 19 ‘மெல்லெழுத் தென்ப ஙஞண நமன’ - தொ. எ. 20 ‘இடையெழுத் தென்ப யரல வழள ’ - தொ. எ. 21 - இவை பதினெட்டும் அச்சாரியை ஒன்றையே பெறும். |